Tuesday 7th of May 2024 04:01:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவில் 300,000 பேருக்கு நாளை  கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!

இந்தியாவில் 300,000 பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!


இந்தியாவின் பரந்தளவான கொரோனா தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான நாளை 3 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தொடர்ந்து 5,000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி விரிவாக்கப்பட்டு தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்படும் என தடுப்பூசித் திட்டங்களை ஒழுங்கமைக்கும் நிடி ஆயோக் அமைப்பின் அதிகாரி வி.கே. போல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 பேர் வீதம் நாளை 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டத்தில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

மாநில அரசுகளிடம் உள்ள சுகாதார பணியாளர்களின் விவரங்களுக்கு ஏற்ப தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதார பணியாளர்கள் பயப்பட வேண்டாம் என உறுதியளிக்கிறேன். அவர்கள் தான் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் வி.கே. போல் கோரிக்கை விடுத்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE